Pages

Tuesday, July 17, 2012

1943இல், அப்போது இலங்கை..........

1943இல், அப்போது இலங்கையை ஆண்ட பிரித்தானிய அரசால் வெளியிடப்பட்ட நாணயம்…. அதிலுள்ள தமிழை வாசித்துப் பாருங்கள்…
“௫0 சதம்” (50 சதம்) என பொறிக்கப்பட்டுள்ளது. 1872.01.01இலிருந்து இலங்கையில் ரூபா மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் வெளியிடப்பட ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு முன்வரை நம் நாட்டிலும் தமிழ் எண்கள் புழக்கத்திலிருந்துள்ளன என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்???


இந்தி, கன்னடம், அரபு போன்ற மொழிகளில், இன்றும் அவ்வவ் மொழிகளிலுள்ள இலக்கங்களே வழக்கிலுள்ளன.. அவற்றுக்கெல்லாம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய, தமிழர் நாம் மட்டும், நம் சுயத்தை இழந்து, புது எண்களைக் கடைப்பிடிக்கிறோம் வெட்கமாக இல்லை???

அந்தப் புதுஎண்கள் கூட நம் தமிழ் எண்களிலிருந்து பிறந்தவை தாம், இங்கு சென்று பாருங்கள்:
http://sivaakaran.blogspot.com/2012/05/123.html

No comments:

Post a Comment