விடிந்தும்
விழிக்காதவன் !
விழித்தாலும்
பல்விலக்காதவன் !
பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !
குளித்தாலும்
சாப்பிடாதவன் !
இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !
பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !
சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !
பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !
சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !
சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !
பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !
வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !
பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !
கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !
தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !
காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !
முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !
பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?
nyc
ReplyDeletetx da
Deletegud keep it up
ReplyDeletetx
Deletesimply awesome, keep it up da good work
ReplyDeletewanna see many of like this in tamil
:) :)
tx
Deleteவாழ்க்கை கோலத்தின் உண்மையான சுழற்சி வடிவத்தினை கண்ணாடி போன்று அப்படியே சுவாரசிமாக சொல்லிவிட்டீர்கள் :)
ReplyDeletetx
Delete