Pages

Sunday, May 6, 2012

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு…!

தமிழன் கடல்கடந்து கொடி கட்டி ஆண்ட வரலாற்றுக்கு ஒரு ஆதாரம் சீனநாட்டிலும் உள்ளது……..!!!

சீனாவிலுள்ள “சூவன்சவு”, பண்டைக்காலத்தில் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். பழங்காலந் தொட்டே, இந்நகருக்கும் தமிழருக்கும் வாணிபத் தொடர்புகள் காணப்பட்டிருக்கின்றன.

கி.பி 1260இல், சீனாவில் ஆட்சிபீடமேறிய “குப்லாய்கான்” என்ற மங்கோலியச் சக்கரவர்த்தியால் இங்கு சிவன்கோவிலொன்று கட்டப்பட்டிருக்கிறது. இவனே பீஜிங் நகரை அமைத்தவனாவான். அக்காலத் தமிழகத்தில் புகழ்பெற்று விளங்கிய இரண்டாம் பாண்டியப் பேரரசுடன் இம்மன்னன் நட்புரீதியான தொடர்புகளைப் பேணியதாக வரலாற்றுக் குறிப்புகள் உண்டு.

இம்மன்னனின் ஆணைப்படி “தவச்சக்கரவர்த்திகள் சம்மந்தப் பெருமாள்” என்ற தமிழனால் “திருக்காதலீச்சரம்” எனப்படும் இச்சிவாலயம் அமைக்கப்பட்டதாக அங்கு ஒரு தமிழ் கல்வெட்டே வைக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டின் இறுதிவரிகள் சீனமொழியில் அமைக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்....

இன்னும் தேடுகிரன் தேடி முடியல வெயிட் பண்ணுங்க :) ....................

No comments:

Post a Comment