Pages

Tuesday, October 16, 2012

''எங்களை எல்லாம் பார்த்தவுடன் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும்''


விடிந்தும்
விழிக்காதவன் !


விழித்தாலும்
பல்விலக்காதவன் !


பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !


குளித்தாலும்
சாப்பிடாதவன் !


இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !


பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !


சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !


பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !


சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !


சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !


பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !


வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !


பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !


கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !


தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !


காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !


முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !


பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?


8 comments:

  1. simply awesome, keep it up da good work
    wanna see many of like this in tamil
    :) :)

    ReplyDelete
  2. வாழ்க்கை கோலத்தின் உண்மையான சுழற்சி வடிவத்தினை கண்ணாடி போன்று அப்படியே சுவாரசிமாக சொல்லிவிட்டீர்கள் :)

    ReplyDelete