Pages

Tuesday, May 8, 2012

கடல்கொண்ட குமரிக்கண்டம் ...............part 1

கடல்கொண்ட குமரிக்கண்டம் பற்றி சிலப்பதிகாரம் போன்ற பழந்தமிழ் நூல்களில் அறியமுடிகின்றது. இதுவே லெமூரியாக்கண்டம் என்று கூறப்பட்டாலும் லெமூரியாக்கண்டம் காணப்பட்ட இடம் பற்றி இன்றும் வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் சர்ச்சை நீடிக்கிறது. 3000 வருடங்க...ளுக்கு முன்பு இன்றைய இலங்கை, இந்தியா. மடகஸ்கார். அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குமரிக்கண்டம் காணப்பட்டதாகக்கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட பாரிய கடற்கோள்களால் இது கடலில் மூழ்கிவிட்டது என அறியமுடிகிறது, கந்தபுராணம் குறிப்பிடும் சூரபதுமனின் மகேந்திரபுரி, இராவணனின் தென்னிலங்கை போன்ற புராண-இதிகாசக்குறிப்புக்கள் மூலம் குமரிக்கண்டம் இருந்ததும் கடற்கோளால் அழிந்ததும் உண்மையே என்ற முடிவுக்கு வரமுடியும். இப்பெருநிலப்பரப்பில் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் ஆய்ந்தார்களாம். குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பரப்புகளில் ஒன்றான ஈழத்தில், குமரிக்கண்டத்து ஆதி மக்களே வாழ்ந்திருந்தார்கள்-வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. மாறிமாறி வந்த கடற்கோள்களினால் குமரிக்கண்டத்தைச் சேர்ந்த ஏழ் தெங்கநாடு , ஏழ் குன்ற நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் குணக்கரை நாடு, ஏழ் குறும்பனை நாடு முதலான 49 நாடுகளும் மறைந்தன என ஆய்வாளர் கூறுவர். இவற்றுள் குமரியாறும், பஃறுளியாறும், பேராறும், குமரிக்கோடும்(குமரி மலை) மகேந்திர மலையும் அடங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.இப் பரந்த தமிழ் நாட்டில் வழக்கிலிருந்த 4 தமிழ் வேதங்களும் மகேந்திரமலையில் உருவானவை எனவும் பிற்காலப்பார்ப்பனர்களால் அவை அழித்தொழிக்கப்பட்டு வடநாட்டு 4 ஆரிய வேதங்கள் அவ்விடத்தில் அமர்த்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே ஓர் ஓவியரின் கற்பனையில் குமரிக்கண்டம்…..!

இராமாயண கால சிதைவுகள் video
கடல்கொண்ட குமரிக்கண்டம் ...............part 2

No comments:

Post a Comment